உலக தாய்ப்பால் வாரம் (ஆகஸ்ட் 1 -7)

டாக்டர். ராஜ்மோகன் அவர்கள் எழுதி ஓர் இணையத்தில் வெளிவந்த கட்டுரை

உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 -7வரை கொண்டாடப்படுகிறது. தாய்ப்பாலின் அரு மைகளை விளக்கவே இந்த விழா கொண் டாடப்படுகிறது.

உலக தாய்ப்பால் வாரம்

குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் தர வேண்டும், அறுவை சிகிச்சையில் பிறந்த பின் இரண்டு மணி நேரத்திற்குள் தரவேண்டும், நேரம் கடந்து தந்தால் பால் சுரப்பது குறைய ஆரம்பிக்கும்.

முதல் இரண்டு மூன்று நாட்களில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும். இது குழந்தைக்கு ஒரு அரு மருந்து. ஒரு தாய் தன் குழந்தைக்கு தரும் சீதனமே இந்த சீம்பால் ஆகும். குழந் தைக்கு போடும் முதல் தடுப்பு மருந்து என்றும் இதை சொல்ல லாம்.

இதில் அதிகமாக புரதச் சத்தும், நோய் எதிர்ப்பு சத்துக்களும் உள் ளன. விட்டமின்கள் அதிகமாகவும், எளிதில் செரிமானம் ஆககூடியதும் ஆகும்.

எனவே ஒரு துளி கூட வீணாக் காமல் சீம்பால் தரவேண்டும்.

குழந்தை பிறந்த முதல் இரண்டு வாரம் தனது எடையில் பத்து சதவிகிதம் குறையும். இது இயல்பானதே, மூன்றாம் வாரத்தில் இருந்தே எடை கூட ஆர ம்பிக்கும்.

குழந்தைக்கு இரண்டு மணி நேரத் திற்கு ஒரு முறை தாய்ப் பால் தர வேண்டும்.

எடை குறைவான குழந்தைக்கு ஒன் றரை மணி நேரத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் தரலாம்.

சாதாரணமாக தாய்க்கு ஆறு மாதம் வரை தினமும் 750 ml பால் சுரக் கும், ஆதற்கு பிறகு 500-600 ml பால் சுரக்கும். இரண்டு வயது வரை பால் தந்தால் நல்லது.

பால் கொடுப்பதால் தாய்க்கு மார்பு புற்றுநோய், ஓவரி புற்று நோய் வராமல் தடுக்கப்படும்.

பிறந்த ஒரு மணி நேரத் திற்குள் பால் கொடுத்தால் தாய்க்கு உதிர போக்கு குறையும். ஏனெனில் பால் குடிக்கும் போது oxytocin என்ற ஹார்மோன் சுரப்ப தால் அது கர்ப்பப்பையை சுருங்க செய்து ரத்தப்போக் கை குறைக்கும்.

தொடர்ந்து ஆறு மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வந் தால் மாதவிடாய் தள்ளிபோகும், இதன் முலம் அடுத்த பிரசவத்தை தடுக்கமுடியும்.

தாய்ப்பாலால் தாய்க்கும் பல நன் மைகள் உண்டு. எனவே தவறாமல் தாய்ப்பால் தரவேண்டும்.

குழந்தை பிறந்த முதல் ஆறு மாத ங்களுக்கு தாய் பால் மட்டு மே தர வேண்டும்

தண்­ணீர் கூட தர தேவை இல்லை (கோடையில் கூட) ஏனென்றால் பாலில் 88% நீர் உள்ளது.

ஆறு மாதங்களுக்கு பிறகு பாலுடன் இணை உணவு தர வேண்டும்.

தாய்ப்பால் இரண்டு வயது வரை தர வேண்டும்.

குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்:

குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு முதலில் சுரக்கும் பால் சீம் பால் எனப்படும். இது அளவில் குறைவாக, மஞ்சள் நிறத்தில் இருக்கும். குழந்தைக்கு தாய் தரும் முதல் தடுப்பு மரு ந்து சீம்பால் ஆகும். எனவே முதல் 3-4 நாட்கள் சீம்பால் மட்டும் தர வே ண்டும்.

(கழுதைப்பால், சீனி தண் ணி, சர்க்கரை ஆகிய பொரு ள்களை பிறந்தவுடன் தரும் பழக்கம் சில இடங்களில் உள்ளது, இது தவறான பழக்கம்.)

பால் பரிசுத்தமானது, எனவே பிறந்தவுடன் சுத்தமான உணவு தாய்ப்பால் மட்டுமே.

பாலில் நோய் எதிர்ப்பு சக்தி தர நிறைய பொருள்கள் உள்ளன. (secretary IgA, Macrophages, Lymphocytes, Lactoferrin, Lysozyme, Bifidus factor, Interferon) எனவே வயிற்று போ க்கு, சளி முதலிய வியாதிகள் வராமல் தடுக்கும்.

தாய்ப்பால் இயற்கையானது என வே எளிதில் செரிக்கும்.

குழந்தையின் மூளை வளர்ச்சி முதல் இரண்டு வருடங்களில் மிக வேகமாக இருக்கும். அதற்கு தேவையான CYSTIENE, TAURINE ஆகிய சத்துக்கள் தாய்ப்பாலில் சரியான அளவில் உள்ளன. (கன்றுகுட்டி பிறந் தவுடன் துள்ளி ஓடும், ஆனால் மனித குழந்தை தத்தி நடக்க ஒரு வருடம் ஆகிறது.) தாய்ப் பால் மட்டுமே சரியான ஊட்டச்சத்தை சரியான நேரத்தில் தரும்.

வேலைக்கு செல்லும் தாய்:

தாய்ப்பாலே குழந்தைக்கு அரு மருந்து. வேலைக்கு செல்லும் தாய்மார்கள் பாலை எடுத்து சேமித்து பின்பு தரலாம்.

சாதாரண அறைவெப்ப நிலையில் எட்டுமுதல் பத்துமணி நேரம் வைக்கலாம்.

குளிர் பதன பெட்டியில் 24 மணி நேரமும், அதனுள் உள்ள ப்ரீசர்(-20 டிகிரி செல்சியஸ்) மூன்று மாத ங்கள் வை த்திருக்கலாம்.

எனவே வேலைக்கு செல்வதை கார ணமாக சொல்லி தாய்ப் பால் தரா மல் இருக்காதீர்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Response

  1. Nice sir. Adha apdiye konjam kavithaiya potingana innum super sir because yarum ippa kattiraiya la padika matranga kavithai na konjam papanga

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.