பாகற்காய்
நம் உடலில் உள்ள பல கிருமிகளினால் தான் நமக்கு நோய் வருகிற
து. சரியான உணவு உண்ணும் பட்சத்தி ல் கிருமிகள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.
உடலில் உள்ள கிருமிகள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரி க்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.
1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட் கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒருமணி நேர
ம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடி யின் விஷம் உடம்பில் ஏறாது.
3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப்பெற்றுச் சிர ங்கு உதிர்ந்து விடும்.
4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழை த்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்க ளுக்குக் கருப்பைநோய் தீரும். பிரச வத்துக்கு பின்வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகு ம் .
5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையு டன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்க ளைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்து டன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.
7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன் ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட் கொண்டால் உடனே காலரா நீங்கும்.
8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியை க் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுட ன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப் பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்து ம்.
10.மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக்கற்களுக் கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத்தொல் லைகளுக்கும் இது மருந்தாகிறது.
11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடு த்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறா ர்கள்.
12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகி றது.
13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத் தவும் உதவுகிறது.
14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற் காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கல ந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பள பளப்பாகி விடுமாம்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல
13.062852
80.274186
Filed under: தெரிந்து கொள்ளுங்கள், மருத்துவம் | Tagged: அதிகரிக்கும், உடல், காய், காலை, நம் உடலில் உள்ள நோய்பரப்பும் கிருமிகளை கொன்று நோய் எதிர்ப்பு சக்தியை அத, நோய் எதிர்ப்பு சக்தி, நோய்பரப்பும் கிருமி, பாகற்காய், மாலை, Chennai, Dharmapuram Adheenam, Islam, Liberation Tigers of Tamil Eelam, Life Insurance Corporation of India, Madurai, Mahinda Rajapaksa, Million Dollar Round Table, Pagarkai, Pavakkai, Sri Lanka, Tamil Nadu, Tanjong Pagar, Velupillai Prabhakaran |
Leave a comment