ஆசை

கங்கையில் ஒரு வியாபாரி குளித்துக் கொண்டிருந்தான்.அப்போது அழகான கைத்தடி ஒன்று மிதந்து வந்தது. அதை எடுத்துக் கொண்டு கரையை நோக்கி நீந்தினான் அவன். அப்போது ஒரு நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டான்.தப்பிக்கக் கடும் முயற்சி செய்தான்.ஒரு வழியாகப் போராடி உயிர் பிழைத்தான். ஆனால் அந்தக் கைத்தடி எங்கோ நழுவிப் போய் விட்டது.

கரைக்கு வந்த அவன் அழகான கைத்தடியை இழந்து விட்டேனே என்று கதறினான். அங்கு இருந்த ஒரு துறவி, ”அய்யா, நீங்கள் குளிக்க வெறுங்கையுடன் வந்ததை பார்த்தேனே? இப்போது கைத்தடியை நழுவ விட்டதாகக் கூறுகிறீர்களே?” என்று கேட்டார். வியாபாரி நடந்ததைக் கூறினான்.

துறவி சொன்னார், ”அய்யா, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வருகிறது. கங்கையில் கைத்தடி மிதந்து வந்தது. இப்போதும் அது மிதந்து கொண்டு போகிறது.அப்படி இருக்கையில் அது உங்கள் கைத்தடி என்று எப்படிக் கூறுகிறீர்கள்? அந்தக் கைத்தடியை இரண்டு நிமிடங்கள் தங்கள் கையில் வைத்திருந்ததனால் அது உங்களுடையது என்று சொந்தம் கொண்டாட உரிமை பெற்று விட்டீர்களா?”

வாழ்க்கையில் எதுவும் நிச்சயமில்லை. பிறக்கும் போது யாரும் எதையும் கொண்டு வருவதில்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போவதில்லை. ஆனால் வாழ்வில் பலவற்றை உரிமை கொண்டாடுகிறோம். நமது துன்பங்களுக்கெல்லாம் அது தான் காரணம்.

“அங்கம் பருத்துவிட்டால் அழகுக் கலைகளுக்கே

பங்கம் வருவதுபோல் பணமும் ஒரு பக்கம்

சேர்ந்து கொண்டே போனால் சீரான சமுதாயம் அழகிழந்து போகுமடி….”

—-இராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை.

— நன்றி உமா சங்கர்

மும்பை தாக்குதல் எச்சரிக்கை குறித்து அமெரிக்கா

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட டேவிட் ஹெட்லி குறித்து தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதில் அமெரிக்கா தயக்கம் காட்டுவதாக கூறப்படும் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. மும்பை தாக்குதலுக்கு முன்பிருந்தே பயங்கரவாத செயல்கள் குறித்த எச்சரிக்கையை தாங்கள் தொடர்ந்து இந்தியாவிற்கு வழங்கி வருவதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செல்ல நாய்க்குட்டிகளை பராமரிக்கும் வழிகள்

நாய்களுக்கு சாப்பாடு போடுவது மட்டும் போதாது. ஒரு சில பராமரிப்பு முறைகளையும் கவனித்தால் அவை நலமாக இருக்கும்.

* நாய்க்குட்டியாக வாங்கி வளர்க்க விரும்பினால், குட்டி பிறந்தவுடன் தாயிடம் இருந்து பிரித்துவிடாதீர்கள். குழந்தைகள்போலவே அவற்றுக்கும் தாய்பால் அவசியம். 40 நாட்கள் வரை தாய்பால் குடித்து வளர்ந்த பிறகு நாய்க்குட்டியை வாங்கி வளர்க்கலாம்.

* ஒருவேளை நாய்க்குட்டியை பிரித்து, வாங்கி வந்துவிட்டால் அதற்கு மாட்டுபால் கொடுக்கலாம். பாலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆறியபிறகு கொடுக்க வேண்டும்.

* குட்டி நாய்களுக்கு ஒரு நாளைக்கு 8 முறை பால் கொடுக்க வேண்டியதிருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் ஊட்டச்சத்து பானங்களையும் கொடுக்கலாம்.

* நகரசபை, மாநகராட்சியில் அனுமதி வாங்கித் தான் நாய் வளர்க்க வேண்டும். அனுமதியில்லாமல் வளர்த்தாலோ அல்லது தெருவில் நாய்களைத் திரியவிட்டாலோ அவற்றை அப்புறபடுத்த அவர்களுக்கு உரிமை உண்டு. எனவே அனுமதி பெற்று கழுத்தில் `டை’ கட்டி, வீட்டில் கட்டிபோட்டு வளர்க்க வேண்டும்.

* நாய்களுக்கு சத்துணவு கொடுத்து வளர்க்க வேண்டும். இறைச்சி கொடுத்தால் நாய்கள் கொழுகொழுவென்று வளரும்.

* நாய்கள் தரையில் படுத்துக் கிடக்கும். இதனால் கிருமிகள் தொற்ற நிறைய வாய்ப்புள்ளது. அவற்றுக்கும் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதற்கு கால்நடை டாக்டரிடம் காண்பிக்கலாம்.

* நாய்களுக்கும் முடி கொட்டும். பொமேரியன் போன்ற முடி அதிகம் உள்ள நாய்களுக்கு முடி உதிர்வதை நாம் பார்க்க முடியும். இரும்புச் சத்து குறைபாடு, வயிற்றில் பூச்சி இருப்பது போன்ற காரணங்களால் முடி உதிரும். வைட்டமின், தாதுஉப்புக்கள் நிறைந்த உணவுகளைக் கொடுத்தால் முடிஉதிர்வதை தடுக்கலாம்.

* எவ்வளவு செல்லமாக வளர்த்தாலும் நாய்களை படுக்கை அறைக்குள் அனுமதிக்க வேண்டாம்.

* ஏ.சி. அறைக்குள்ளும் நாய்களை அனுமதிப்பதை தவிர்க்கலாம். இதனால் அவற்றுக்கு சளி பிடிக்க வாய்ப்புள்ளது.

* நாய் பிறந்து 4 மாதத்தில் இருந்து 8 மாதம் வரை 20 நாட்களுக்கு ஒரு முறையும், 8 மாதத்தில் இருந்து உயிரோடு இருக்கும் வரைம் நாயின் எடையை பார்த்து அதற்கேற்ப பூச்சி மருந்து கொடுத்து வர வேண்டும்.

* ஒன்றுக்கு மேற்பட்ட நாய்கள் சேர்ந்து கொண்டால் அவைகளும் விளையாடத் தொடங்கி விடும். அப்போது ஒன்றையொன்று கடித்துக் கொள்வதும் உண்டு. இதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாது.

* நாய்களால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், அதற்கு தடுப்பு ஊசி போட வேண்டும். எல்லாவிதமான தடுப்பு ஊசிகளையும் போட்டு, பாதுகாப்பாக நாய்களை வளருங்கள்.

Senthilvayal

மன்மோகன் சிங்: அமெரிக்கா பக்கம் இந்தியா சாயவில்லை

அமெரிக்கா பக்கம் இந்தியா சாயவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

மலேசியா வந்துள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அங்குள்ள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியாவின் அயலுறவுக் கொள்கைகள் அதன் தேசிய நலன்களின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.சர்வதேச நிதி நிறுவனங்கள் வேகமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.அவ்வாறு நடந்தால்தான் இந்தியா போன்ற வளரும் நாடுகள் உரிய முறையில் அவற்றில் பிரதிநிதித்துவம் பெற முடியும்.

முன்னொரு காலத்தில் அணி சேரா நாடுகள் கூட்டமைப்பின் வல்லமை கொண்ட நாடாக திகழ்ந்த இந்தியா, தற்போது அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் பக்கம் சாய்கிறதா என்று கேட்கப்படுகிறது. ஆனால் இந்தியா அவ்வாறு எந்த ஒரு பக்கமும் சாயவில்லை.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற அனைத்து முக்கிய வல்லரசு நாடுகளுடன் நல்லுறவு வைத்துக்கொள்ளவே இந்தியா விரும்புகிறது என்று மன்மோகன் சிங் அந்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.

thanks webdunia

வெயல்பூல் சலவை எந்திரம் (வாஷிங் மிஷின்)

 

ABM551
5.5Kg
……………………………………
Water Saving Wash
Biological Wash
Half Load Cycle (Up to …
Fixed Spin – 600 rpm
CE Approved
……………………………………
Rs.20190*

********************

PUM702
7 kg
……………………………………
In-Built Anti-Crease Cycle
Fixed Spin – 600 rpm
No Permanent plumbing
Multiple Wash Programs …
2 years warranty
……………………………………
Rs.23400*

************************

PUM701
7 kg
……………………………………
In-Built Anti-Crease Cycle
Fixed Spin – 600 rpm
No Permanent plumbing
Multiple Wash Programs …
Auto Restart
……………………………………
Rs.24900*

*********************************

PUD701
7 kg
……………………………………
6th Sense
Anti Bacterial Wash
Multiple Wash Programs …
Woolmark Approved
No Permanent plumbing
……………………………………
Rs.25500*

******************************************

SPORT
7 kg
……………………………………
Stain Wash Program
Woolmark Approved
No Permanent plumbing
Variable Temperature 0-…
6th Sense
……………………………………
Rs.26500*

other details visit:

http://www.whirlpoolindia.com/ProductListing.aspx?SubCatID=29

அங்காடித்தெரு புகழ் அஞ்சலி பேட்டி: சூட்டிங்கில் கலவரம்! உயிர் தப்பியது எப்படி?

நடிகர் கரண் நாயகனாகவும், நடிகை அஞ்சலி நாயகியாகவும் நடிக்கும் தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து வருகிறார். டைரக்டர் வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் கதை குமரி மாவட்டத்தை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது. டைரக்டர் வடிவுடையானின் சொந்த ஊரான களியக்காவிளை பகுதியில் கடந்த வாரம் சூட்டிங் நடத்தப்பட்டது. நேற்று குலசேகரம் பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அஞ்சலி ‌தொடர்பான காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தபோது சூட்டிங் ஸ்பாட்டுக்கு 7 பேர் அடங்கிய கும்பல் ஒரு ஆட்டோவில் வந்தது. அந்த கும்பல் படப்பிடிப்பு குழுவினரிடம் தகராறு செய்ததுடன், படக்குழுவினரை தாக்கியது. டைரக்டர் வடிவுடையான் தாக்கப்பட்டார். அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இதற்கிடையில் அசம்பாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அங்கிருந்த அசிஸ்டென்ட் டைரக்டர்கள் நடிகை அஞ்சலி மீது போர்வையை போர்த்தி அருகில் இருந்த வீட்டுக்குள் அழைத்து சென்று விட்டனர். கலவரக்காரர்கள் கையில் சிக்காததால் அஞ்சலிக்கு எந்த காயமும் இன்றி தப்பினார். படப்பிடிப்பு சாத‌னங்களை உடைத்து விட்டு அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. இதுபற்றி குலசேகரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து நடிகை அஞ்சலி கூறுகையில், நான் இதுவரை 9 திரைப்படங்களில் நடித்துள்ளேன். திரைப்படம் சூட்டிங்கிற்காக பல இடங்களுக்கு சென்றுள்ளேன். ஆனால் இதுபோன்ற சம்பவம் எதுவும் நடந்தது இல்லை. சூட்டிங் ஸ்பாட்டுக்குள் திடீரென்று சிலர் வந்து ரகளையில் ஈடுபட்டதை பார்த்து நான் நடுங்கிப் போய் விட்டேன். இப்படி ஒரு சம்பவத்தை நான் இதுவரை நேரில் பார்த்தது இல்லை. டைரக்டரை அடித்து உதைத்து, அவருடைய காரை கல்லால் அடித்து உடைத்து விட்டார்கள். நிலைமை மோசமாவதை பார்த்து உதவி டைரக்டர்கள் புத்திசாலித்தனமாக என்னை மறைத்து வைத்து காப்பாற்றினார்கள். வன்முறை கும்பல் கையில் சிக்கினால் நான் என்ன ஆகியிருப்பேன்? என்பதை நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது, என்றார்.

 

thanks dinamalar

குழந்தையை ஜன்னலில் தூக்கி எறிந்த கொடூர தாய்; பச்சிளம் குழந்தை பரிதாப பலி

மும்பையில் மருத்துவமனையில் இருந்த ஜன்னல் வழியாக பெண் சிசுவை தூக்கி எறிந்த தாயின் கொடூர செய்கை சி.சி.டி.,வியில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் மருத்துவமனை ஒன்றின் குழந்தைகள் நலப்பிரிவில் தீபிகா என்ற பெண் ஒன்றரை மாதமே ஆன தனது இரட்டைக் குழுந்தைகளை சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார். இரண்டு குழந்தைகளும் குறைப்பிரசவத்தில் பிறந்ததால் மிகவும் அடை குறைவாக இருந்தன. இவற்றில் ஒன்று ஆண் குழந்த‌ை, ஒன்று பெண் குழந்தை.

குழந்தையை “காணவில்லை” : இந்நிலையில் தீபிகா திடீரென தனது பெண் குழந்தையை காணவில்லை என கூச்சலிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். திகைத்துப் போன மருத்துவமனை நிர்வாகம் சி.சி.டி., வி கேமரா பதிவை பார்த்துள்ளது. அப்போது தீபிகா வார்டில் இருந்து தனது பெண் குழந்தையை டவலில் சுற்றி எடுத்துக் கொண்டு கழிப்பறைக்குள் நுழைவது பதிவாகியிருந்தது. ஆனால் வெளியில் வரும் போது தீபிகா கையில் குழந்தை இல்லை. சுதாரித்துக் கொண்ட நிர்வாகம் தீபிகாவி‌டம் தீவிரமாக விசாரிக்க பெண் குழந்தையை தான் ஜன்னல் வழியாக ‌வெளியே தூக்கி எறிந்ததாக தெரிவித்தார் தீபிகா. மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை மீட்டு கொண்டு வந்தனர். ஜன்னல் வழியாக தூக்கி எறியப்பட்டதால் குழந்தைக்கு காயம் ஏற்பட்டிருந்தது. மேலும் எலிகள் கடித்து குழந்தையின் தலையில் காயங்களை ஏற்படுத்தியிருந்தன. தீவிர சிகிச்சை அளித்தும் அந்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக இறந்தது.
இதனையடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீபிகாவின் மற்றொரு குழந்தை சிகிச்சை பெற்று வருவதால், சிகிச்சை முடிந்ததும் தீபிகா கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர். தீபிகாவின் கணவர் இந்த சம்பவம் தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும். பெண் குழந்தை என்று தான் எப்போதும் பேதம் பார்த்ததில்லை என்றார். இருப்பினும் தனது மனைவியின் செயல் அதிர்ச்சியளிப்பதாக கூறினார்.

thanks dinamalar

ம‌லர்களின் மகிமை

1. பக்தி மிகுந்திடவே பசுமையான துளசி சமர்ப்ப‍ணம்
2. பக்தி மனப்பான்மை தரும் வில்வ இலை சமர்ப்ப‍ணம்
3. கட்டுப்பாட்டைக் கொடுத்திடும் திருநீற்றுப் பச்சிலை சமர்ப்ப‍ணம்
4. அல்ல‍வை அகற்றி நல்ல‍வை வளர்த்திடும் மருக்கொழுந்து சமர்ப்ப‍ணம்
5. புதிய பிறப்பாம் தவனம் சமர்ப்ப‍ணம்
6. மரணமில்லா வாழ்வை நாட பன்னைக்கீரை  சமர்ப்ப‍ணம்
7. நுணுக்க‍மான முயற்சிக்கு மஞ்சள் கரிசலாங்கன்னி  சமர்ப்ப‍ணம்
8. தெய்வீகத்தை நாடும் சக்தி பெற மருதாணி சமர்ப்ப‍ணம்
9. அந்தாராத்ம வளர்ச்சிக்கு ஆர்வந்தரும் பவழ மல்லிகை சமர்ப்ப‍ணம்
10. தன் முறைப்பைத் தவிர்த்து சரணாகதி அடைந்திட நாட்டு ரோஜா சமர்ப்ப‍ணம்

11. தெய் அருள் பெற பருத்தி ரோஜா சமர்ப்ப‍ணம்
12. மானுட உணர்ச்சியை இறையன்பாக மாற்றிடும் சிவப்பு ரோஜா சமர்ப்ப‍ணம்
13. இறையன்பாக மாற்றிடும் சிறப்பு ரோஜா சமர்ப்ப‍ணம்
14. தெய்வத்திடம் தீவிர அன்பு கொள்ள‍ ஆரெஞ்சு நிற ரோஜா சமர்ப்ப‍ணம்
15. அகத்திலும், புறத்திலும் பூரண இறையன்பைப்பெற வெள்ளை ரோஜா சமர்ப்ப‍ணம்
16. புதிய திறமைகளைப் படைக்கும் சம்பங்கி பூ சமர்ப்ப‍ணம்
17. என்றும் அழியாத்தன்மை அளித்திடும் வாடா மல்லிகை சமர்ப்ப‍ணம்
18. பூரண பாதுகாப்பைத்தரும் வெண்காதிப்பூ சமர்ப்ப‍ணம்
19. எத்த‍டைகளையும் தகர்க்கும் தைரியமாம் எருக்க‍ம்பூ சமர்ப்ப‍ணம்
20. பற்றாக்குறையைப் போக்கி பொருள் வளம் சேர்க்கும் (ஆழ்சிவப்பு, இளஞ்சிவப்பு) நாகலிங்கப் பூ சமர்ப்ப‍ணம்
21. தன் நலமற்ற‍ வளமை தரும் (வெண்) நாகலிங்கப்பூ சமர்ப்ப‍ணம்
22. அந்தராம்மத் தூய்மையாம் அழகு மல்லிகை சமர்ப்ப‍ணம்
23. பொய்மையை சரண்டையச் செய்திடும் அடுக்கு வெளிர் சிவப்பு அலரி சமர்ப்ப‍ணம்
24. இறைவனை நாடும் இனிய எண்ண‍ம் தரும் கஸ்தூரி அலரி பூ சமர்ப்ப‍ணம்
25. அமைதியான மனம் அளிக்கும் ஒற்றை வெண் அலரி சமர்ப்ப‍ணம்
–      தொடரும்

எழுதியவர் Dr. பக்தவச்சலம் M.D., (Acu)
கைபேசி எண்.9941427488

IT Industry: Seven promises (fun)

Seven promises should be taken before choosing IT industry.

  • I have already enjoyed my life in childhood.
  • I love tension.
  • I love to work on Sundays and Holidays.
  • I want to take revenge on myself.
  • I do not want to marry before 30.
  • I want to study until my death.
  • I do not want hair on my head.

Salute to all IT Genius.

Happy! Happy!! Happy!!!

Try to keep the person happy always, whom you see every day in the mirror.